![]() |
மாந்தெனக் குமரிமலை மருவியன் தமிழனே! மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! மொழி வளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே! மோனையுடன் சிறந்த செய்யுள் பேசியவன் தமிழனே! பனிமலை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே! பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே! - பாவாணர் |
|||
![]() |
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சும் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும், - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர். - பாவேந்தர் |
|||