பெர்னாட் சா

   சுரங்கத் தொழிலாளர் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் பெர்னாட் சாவும் கலந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். கூட்டத்திற்கு வருவதாக ஒப்புக் கொண்டு விட்டார். கூட்டம் நடந்து  கொண்டிருந்தது. ஏதாவது பேசு மாறு பெர்னாட் சாவை வேண்டிக் கொண்டனர், கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணியவர்ள். ஷா எழுந்தார். மக்களின் கவனமும் பார்வையும் அவர் பக்கமே திரும்பின. ஷா சொன்னார்:

  " சுரங்கத் தொழிலாளர்களுக்கு நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஒன்றே ஒன்றுதான் கூறப் போகிறேன் அதை மட்டும் அவர்கள் நினைவில் கொண்டு நடந்தால் போதும். அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் மீண்டும் மீண்டும் கீழே போகாதீர்கள், மேலே ஏரி வாருங்கள் என்பதுதான்!"

Free Web Hosting