சாரா சேத்

 

   செபியின் ( Sapin)  நாட்டு இசை மேதை சாரா சேத் 'வயலின்' வாசிப்பதில் ஈடு இணையற்றவராக விளங்கினார். ஒருமுறை அவர் வாசிப்பைக் கேட்டப் பத்திரிகையாளர் ஒருவர், "இவ்வளவு அருமையாக வாசிக்கிறீர்களே, இப்படிப்பட்ட வாசிப்பை என் வாழ்நாளில் இதுவரை கேட்டதே இல்லை. இந்தத் திறமை எப்படி உங்களுக்கு வந்தது?" என்று கேட்டார்.

     அதற்கு சாராசேத், "என்னைப் போல் நீங்களும் இருப்பத்தைந்து ஆண்டுக்காலம் நாள்தோறும் எட்டுமணி நேரம் இடைவிடாமல் வாசித்தால் 'வயலின்' திறமையை மிக எளிதாகப் பெறலாம்" என்றார்.

 

 

Free Web Hosting